×

நத்தத்தில் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மேளதாளம் முழங்க இறுதி ஊர்வலம்

நத்தம்: நத்தத்தில் ஜல்லிக்கட்டில் கலக்கிய கோயில் காளை இறந்தது. இதை மேளதாளம் முழங்க கிராமமக்கள் அடக்கம் செய்தனர். நத்தம் காந்திநகர் மலையாளத்துக்கருப்பு, மந்தையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான காளை நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டது. தகவலறிந்த ஊர்பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது சந்தனம், ஜவ்வாது, வேஷ்டி, துண்டுகள் போன்றவற்றை அணிவித்தனர். இந்த காளை தவசிமடை, அரளிப்பாறை, பாலமேடு, கொசவபட்டி போன்ற சிறப்புவாய்ந்த ஜல்லிகட்டுகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுப்பொருட்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இறந்து போன காளை மேளதாளம் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

Tags : Funeral procession , Jallikkattu, bull
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...