×

30 வருடங்களுக்கும் மேலாக சிறையிலேயே வாழ்க்கை.. பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்க வேண்டும் : ஜனாதிபதிக்கு மதுரை எம்.பி.கடிதம்

சென்னை : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் தங்களது வாழ்க்கையை கழித்து வரும் எழுவரின் துயர் பற்றி எடுத்துரைக்கவும், அவர்களது விடுதலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இந்திய சட்ட அமைப்பின் படி வாழ்நாள் சிறை என்பதன் காலம் வரையறுக்கப்படவில்லை என்றாலும் பொதுவாக 14 வருடங்கள் என்பது ஒரு நியதியாக கடைபிடிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் இந்த எழுவரும் இரண்டு வாழ்நாள் தண்டனைகளுக்கு மேலாக தொடர்ந்து சிறையில் இருக்கின்றனர். தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் ,மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ,பல்வேறு அமைப்புகள் இந்த எழுவரின் விடுதலையை தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆகவே மக்கள் மத்தியிலும் இவர்கள் விடுதலைக்கான விரிந்த ஏற்பு உள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சினையில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று கூறியதையும் இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் . எனவே இந்த பிரச்சினையில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மிக மிக அதிகமான தண்டனையை அனுபவித்து விட்டார்கள் என்கின்ற அடிப்படையில் இந்த விடுதலையை வழங்க வேண்டும் என்று மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : jail ,MPs ,President ,Perarivalan ,release ,Madurai MP , Perarivalan, Liberation, Nomination, President, Madurai MP, Letter
× RELATED சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் திடீர் மரணம்!!