சென்னை: தமிழகத்தில் ரூ.224.57 கோடியில் 72 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். ஊரகப்பகுதிகளை பசுமை மயமாக்கும் வகையில் இதுவரை 11 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளை கட்டுப்படுத்த விரைவில் 61 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.