×

பிரபல ரவுடியின் மகன் ஓடஓட வெட்டிக்கொலை: கொருக்குப்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் பிரபல ரவுடியின் மகனை மர்ம கும்பல் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொருக்குபேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி விஜயன். இவருடைய மகன் பாலு(30). ஆட்டோ டிரைவர். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி வழக்கு என பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பட்டாக்கத்திகளுடன் வந்தது. இதை பார்த்த பாலு அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது, அந்த கும்பல் அவரை விடாமல் ஓடஓட விரட்டி சென்று  தலையில் சரமாரியாக வெட்டியது.

இதில், சம்பவ இடத்திலேயே பாலு துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அதன் பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. தகவலறிந்த ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தென்னரசு, இளவரசு ஆகியோர் தலைமையில் வந்த கும்பல் இந்த கொலை யை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Famous Rowdy ,Odota ,murder , Famous Rowdy's son Odota murder: Stir in Korukkupettai
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...