×

கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் சூதாடிய 5 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில்  சூதாட்டம்  ஆடிய போலீசார் 5 பேரை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம், கோட்டைகரை, தேர்வழி ஊராட்சி தைல மர தோப்பு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பதாக திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து மாவட்ட சிறப்பு படையினர் நேற்று மேற்கண்ட பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்தனர். கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூதாட்டம் ஆடியது தெரியவந்தது. இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி பஜாரைச் சேர்ந்த குமார் (44), ஜெகன் (44), செல்வி(35), விஜயகுமார் (35), ஏனாதிமேல்பாக்கம் பகுதி ஏழுமலை (36) ஆகியோரை சிறப்பு தனிப்படை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ 7 லட்சத்து 20 ஆயிரம பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து கும்மிடிப்பூண்டி போலீசார், 5 மீதும் வழக்கு பதிவு செய்து  விசாரிக்கின்றனர்.

Tags : bus stand ,Gummidipoondi , Five arrested for gambling at Gummidipoondi bus stand
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை