போடி: தேனி மாவட்டம், போடி சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து நேற்று மாலை 5.45 மணிக்கு தேனி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர், சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இரவு வரை நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம், முறைகேடு தொடர்பான ஆவணங்கள் அதிகளவில் சிக்கியிருப்பதாக ெதரிகிறது.