×

ஆத்தூர் அருகே சோகம்; 3 மாத பெண் குழந்தையுடன் ஒரேகயிற்றில் இளம்பெண் தற்கொலை: காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்

சேலம்: ஆத்தூர் அருகே 3 மாத பெண் குழந்தையை கொன்றுவிட்டு ஒரே கயிற்றில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் பக்கமுள்ள உமையாள்புரத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் தவமணி(27). இவருக்கும், சார்வாய்புதூர் தேவேந்திரன் தெருவை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மணிகண்டன் மூட்டைதூக்கும் கூலித்தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மனைவி இவரை விட்டுபிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு தான் தவமணியை திருமணம் செய்து கொண்டார்.

3 ஆண்டுகளுக்கு பிறகு தவமணி கர்ப்பம் அடைந்தார். பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதற்கு யாசிகா என பெயர் வைத்தனர். இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன் மனைவியை அழைத்து கொண்டு மணிகண்டன் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பெரியசாமிக்கு செல்போனில் பேசிய உறவினர், தவமணி மற்றும் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உறவினர் தனசேகரனுடன் சார்வாய்புதூக்கு வந்தார். அங்கு பூட்டிய வீட்டிற்குள் மகள் தவமணியும் குழந்தை யாசிகாவும் தூக்கில் சடலமாக தொங்கினர்.

இதையடுத்து வீட்டின் கதவை தனசேகரன் உடைத்தார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு ெதரிவித்தனர். என்றாலும் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய இருவரையும் கீழே இறக்கி வைத்தனர். இதுகுறித்து தலைவாசல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் தனது மகளின் சாவில் சநதேகம் இருப்பதாக தவமணியின் தந்தை பெரியசாமி போலீசில் புகார் செய்துள்ளார். திருமணம் ஆகி 5 ஆண்டிற்குள் இளம்பெண் குழந்தையுடன் இறந்துள்ளதால் வரதட்சணை கொடுமை இருக்கிறதா? என்பது குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.இளம்பெண் தவமணி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் தெரியவில்லை. குழந்தை விவகாரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கடுமையாக பேசியதால் மனம்உடைந்த தவமணி குழந்தையை கொன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், முதலில் தவமணி கயிற்றை கழுத்தில் மாட்டிவிட்டு விட்டு பின்னர் குழந்தையின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொன்றிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து ஆர்டிஒ விசாரணை நடத்தி வருகிறார்’ என்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Tragedy ,Attur ,suicide ,baby girl ,Teen , Tragedy near Attur; Teen commits suicide with 3-month-old baby girl: What is the cause? Sensational information
× RELATED பரனூர், ஆத்தூர் உட்பட 29...