×

பட்டாசு விற்பனை மீதான தடையை விலக்கி கொள்ள வேண்டும் ராஜஸ்தான் அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை,:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் நடைபெறும் பட்டாசு விற்பனையில் 95 சதவிதம்  பட்டாசுகள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தியாகிறது. இந்தத் தொழில் மூலம் 6 லட்சம் தொழிலாளர்கள் வரை வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு படவில்லை எனத் தெரிவித்துள்ள நிலையிலும், காற்று மூலம் கொரோனா பரவும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ள நிலையிலும் ராஜஸ்தான் அரசு பட்டாசு விற்பனைக்கு விதித்துள்ள தடையுத்தரவு 6 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாக அமைந்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை காட்டி உள்நாட்டு சுய தொழில்களை அழிக்கும் செயலின் விளைவாகவே பட்டாசு வெடிப்புக்கு தடை போடும் நிலை ஏற்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பாஜக மத்திய அரசின் வேளாண் வணிக சட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் ராஜஸ்தான் மாநில அரசு குடிசைத் தொழிலாகவும், சிறு, குறு தொழில்கள் என்ற முறையிலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளித்து வரும், ஆயிரக்கணக்கான சிறு முதலீட்டாளர்களின்  சுய தொழிலையும் பாதுகாக்கும் வகையில் பட்டாசு வெடிப்புக்கான தடையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Mutharajan ,government ,Rajasthan , rajasthan, mutharasan
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...