×

முசிறி அருகே உமையாள்புரத்தில் சாலையோரம் சாய்ந்துள்ள டிரான்ஸ்பார்மர்

முசிறி: முசிறி அருகே உமையாள்புரத்தில் சாலையோரத்தில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். முசிறி அருகே திருச்சி ரோட்டில் உமையாள்புரம் அமைந்துள்ளது. இங்கு சாலையோரத்தில் டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. மழை மற்றும் பலத்த காற்று வீசும்போது டிரான்ஸ்பார்மர் சாய்ந்து விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் அவ்வழியாக சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கூறுகையில், சாலையோரத்தில் சாய்ந்த நிலையில் இருக்கும் டிரான்ஸ்பரை மாற்ற வேண்டும் என மின்வாரிய துறையினருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. புதிய மின் கம்பம் அமைத்து டிரான்ஸ்பார்மரை அதில் வைப்பதற்காக கொண்டுவந்து போடப்பட்ட மின்கம்பங்கள் மண்ணில் புதையுண்டு வருகிறது. மின்கம்பம் சாய்ந்து டிரான்பார்மர் கீழே விழுந்தால் மின்கம்பிகள் அறுந்து விழும் வாய்ப்பு உள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும். எனவே மின் வாரிய அலுவலர்கள் விரைந்து செயல்பட்டு டிரான்ஸ்மார்மரை அகற்றி புதிய மின்கம்பத்தில் பொருத்த வேண்டும் என்று கூறினார்.

Tags : Umayalpuram ,Musiri , Musiri, Transformer
× RELATED முசிறியில் பாரிவேந்தர் வாகனத்தை...