×

தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூர கொலையில் ரவுடி உள்பட 4 பேர் கைது

செங்கல்பட்டு: மறைமலைநகர் அடுத்த கீழக்கரணையை சேர்ந்தவர் தேவபிரகாஷ் (27). மறைமலைநகரில் பாஸ்ட்புட் கடை நடத்தி வந்தார். இவரது  கடையின் அருகில் அடுத்தடுத்து டீக்கடை, ஓட்டல் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு தேவபிரகாஷ், பாஸ்ட்புட் வாசலில் அமர்ந்து மது  அருந்தினார். அப்போது, அருகில் உள்ள டீக்கடைக்காரர், தனது கடைக்கு போர்டு வைக்க முயன்றார். இதை பார்த்த ஓட்டல்காரர் எதிர்ப்பு தெரிவித்தார்.  உடனே இதுபற்றி தேவபிரகாஷிடம் டீக்கடைக்காரர் கூறினார். அவர், ஓட்டல்காரரை தட்டி கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனே ஓட்டல்காரர், மலைமேட்டு தெருவை சேர்ந்த பிரபல ரவுடி விஜய்யை செல்போனில் தொடர்பு கொண்டு, அங்கு வரவழைத்தார். அதன்பேரில்  அங்கு தனது கூட்டாளிகள் அரவிந்தன், வெங்கடேசன், வினோத் ஆகியோருடன் வந்த விஜய்,  தேவபிரகாஷிடம் தகராறு செய்து, மறைத்து  வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். புகாரின்படி மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், வெங்கடேஷ்,  அரவிந்தன், ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : death ,Rowdy ,teenager , Four people, including Rowdy, have been arrested for stoning a teenager to death Send feedback
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...