×

மாஜி நண்பர் மீது வழக்கு தொடர நடிகை அமலா பாலுக்கு அனுமதி: போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த விவகாரம்

சென்னை: தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர நடிகை அமலா பாலுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. மைனா, தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அமலா பால். ஆடை படத்தில் நடித்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியவர். இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றவர். இந்நிலையில் மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங், அமலாபாலுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. அவற்றை பவ்னிந்தர் சிங், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

சிறிது நேரத்தில் அந்த புகைப்படங்களை அவர், நீக்கிவிட்டார். படங்களை பார்த்ததும் அமலா பால் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை அமலாபால் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங், இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவருக்கும் எனக்கும் திருமணம் ஆகிவிட்டதாக தெரிவிக்கும் வகையில் அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். எனவே, எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவர் வெளிட தடை விதிக்க வேண்டும். மேலும் அவர் மீது சிவில் அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதி விசாரித்து, பவ்னிந்தர் மீது சிவில் அவதூறு வழக்கு தொடர அமலா பாலுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Tags : Amala Pal ,ex-boyfriend , Actress Amala Pal allowed to sue ex-boyfriend: Posting photo on social media
× RELATED ராஷ்மிகாவுக்கு முன்னாள் காதலன் வாழ்த்து