×

தீவிரவாதிகளுக்கு ஐஎஸ்ஐ அமைப்பு உத்தரவு; இந்தியாவுக்கு எதிராக ‘தீயாய்’ வேலை செய்யணும்!.. உளவுத்துறை வெளியிட்ட தகவலில் பகீர்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் மக்களை கொல்வதற்காக பாகிஸ்தான் ஆதரவு ஹிஜ்புல் தீவிரவாதிகள் ஓய்வின்றி செயல்பட ேவண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்  வெளியாகி உள்ளது. இந்தியாவின் காஷ்மீரை சுற்றிய  எல்லை பகுதிகளில் காவல் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்கு, பல்வேறு வழிகளில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளால் சோதனைகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக போர்நிறுத்த ஒப்பந்தத்தினை  மீறி நடத்தப்படும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களின் ஊடுருவல்காரர்களை எதிர்த்து ராணுவம் போரிட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு மற்றும்  பாகிஸ்தான் ராணுவம் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஹிஜ்புல் தீவிரவாதிகள் கலந்து கொண்டுள்ளனர்.  

இதுகுறித்து இந்திய உளவு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், ‘தீவிரவாதிகள் ஓய்வின்றி செயல்பட அவர்களுக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் வாழும் உள்ளூர் மக்களை இலக்காக கொண்டு தாக்குதல்  நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான லஷ்கர் இ தொய்பாவுக்கு, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. காஷ்மீரில் அமைதியை  சீர்குலைக்கவும், போலீசார் மற்றும் அரசியல்வாதிகளை படுகொலை செய்யவும் ஹிஜ்புல் தீவிரவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மக்களை கொல்லுதல், உள்நாட்டு பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல், அரசியல்வாதிகளை படுகொலை செய்தல் போன்ற தாக்குதலை நடத்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதால்,  இவர்களை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு இந்திய பாதுகாப்பு படையினருக்கு ஏற்பட்டு உள்ளது.

Tags : extremists ,ISI ,Thiai ,India , ISI system orders extremists; ‘Thiayi’ wants to work against India! .. Pakir in the information released by the intelligence
× RELATED பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்து...