×

வளர்ந்த நாடுகள் கூட கொரோனா பாதிப்பின் 2-வது தாக்கத்தில் இருந்து மீள இயலாத நிலையில், தமிழகம் மீள்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனா பாதிப்பின் 2-வது தாக்கத்தில் இருந்து மீள இயலாத நிலையில், தமிழகம் மீள்கிறது. தற்போது தொற்று உறுதியானவர்களில் 3.5% பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 3.34 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன எனவும் கூறினார்.


Tags : countries ,Vijayabaskar ,interview ,Tamil Nadu , Even developed countries are unable to recover from the second impact of the corona impact, Tamil Nadu is recovering: Minister Vijayabaskar interview
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...