×

தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம்; 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வெளியிட்டுள்ள உத்தரவில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜியாக இருந்த எம்.எஸ். ஜாஃபர் சேட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை டாக்டர் சி. சைலேந்திர பாபுவிடம் கூடுதல் பொறுப்பாக இருந்த தீயணைப்புத் துறை டிஜிபி பதவி தற்போது ஜாபர் சேட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜாபர் சேட் இதுவரை வகித்து வந்த குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி பதவியை, இனி சென்னை ரயில்வே துறை டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசன் அயல் பணியில் இருந்த ஏ.டி. துரைக்குமார் சென்னை காவல்துறையின் நிர்வாகப் பிரிவில் டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Jaber Chad ,IPS officers ,Tamil Nadu Fire Department ,Government of Tamil Nadu , Tamil Nadu Fire Department DGP, Jaber Chad, Appointed, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு முழுவதும் 13 ஐபிஎஸ்...