×

பந்தலூர் அருகே மின்சாரம் தாக்கி யானை பலி

பந்தலூர்: பந்தலூர் அருகே மின்சாரம் தாக்கி யானை பலியானது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு ஆணையப்பன்சோலை வனப்பகுதியையொட்டி தனியார் தோட்ட மேலாளர் நேற்று ரோந்து சென்றபோது காட்டு யானை மின்சாரம் தாக்கி கருகிய நிலையில் இறந்து கிடந்தது. இது குறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். கூடலூர் மாவட்ட வன அலுவலர் சுமேஸ்சோமன், உதவி வனப்பாதுகாவலர் விஜயன், வனச்சரகர் மனோகரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஸ்குமார் இறந்த யானைக்கு உடல்கூறு பரிசோதனை செய்தார். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், `யானை இறந்த இடத்தில் மின்கம்பி செல்கிறது. அதன் அருகே உள்ள பாக்குமரங்களை யானை உடைத்துள்ளது. அப்போது பாக்கு மரம் மின்கம்பி மேல் விழுந்ததில் யானை இறந்தது. இறந்த ஆண் யானைக்கு சுமார் 15 வயது இருக்கும்’ என்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அதே பகுதியில் யானை புதைக்கப்பட்டது.

Tags : Pandharpur , Pandhalur, electricity, elephant
× RELATED பந்தலூர் பஜாரில் சாலையில்...