திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் 556 பழங்குடி இன மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் வெளியே காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது உடனடியாக குடிமனை பட்டா வழங்க வேண்டும். பழங்குடியினர் பூர்வகுடி பழங்குடி இருளர் இன மக்களுக்கு சட்டப்படியும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியும் வழங்க வேண்டிய உரிமை பட்டா வழங்காமல் அலைக்கழிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவின் மீது ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பா.பொன்னையா உறுதியளித்தார்.