பெரம்பூர்: வில்லிவாக்கத்தில் கடந்த மாதம் வழக்கறிஞர் ராஜேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சூழ்ச்சி சுரேஷ் மற்றும் அருண் பாண்டியன் (27) ஆகிய இருவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதில் சூழ்ச்சி சுரேஷ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அருண்பாண்டியனை தேடிவந்தனர். அவரது செல்போன் சிக்னலை டிராக் செய்தபோது, மரக்காணம் பகுதியில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்து, சென்னை கொண்டு வந்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது 4 கொலை வழக்கு, 5 கொலை முயற்சி உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.