துபாய்: டெல்லி அணிக்கு 153 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. இதனால் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.