×

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பல்கலை.யில் தீவிரவாதிகள் தாக்குதல்...!! 19 பேர் உயிரிழப்பு என தகவல்

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பல்கலை.யில் நடந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். காபூல் பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளுடன் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்ததாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் பல்கலைக்கழகத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது.

சில மணி நேரங்கள் இந்த துப்பாக்கிச்சண்டை நீடித்ததாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலில்  மூன்று பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகவும் அதில் ஒருவன் வெடிகுண்டுகளை உடலில் கட்டியபடி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாகவும் ஏனைய இரு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது படுகாயம் அடைந்து இருக்கலாம் என ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தலீபான் அமைப்பு தெரிவித்துள்ளது.



Tags : university ,Kabul ,Terrorists ,Afghanistan , Terrorists attack university in Kabul, the capital of Afghanistan ... !! 19 people were reported dead
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...