×

2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மக்களுடன் தான் கூட்டணி...!! வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும்; கமல்ஹாசன் அறிவுறுத்தல்

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடான கலந்துரையாடலில் கமல் இதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. தேவையென்றால் ரஜினியுடன் கூட்டணி அமைப்பேன் என்று கட்சி தொடங்காத ரஜினிக்கு கமல்ஹாசன் கூறியது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஆள விடுங்கப்பா சாமி என்று உடல் நலமே முன், சமூக நலன் பின் என்றவாறு ரஜினி ஒதுங்கிக்கொண்டார்.

ஆனால், வரும் தேர்தலுக்குள் நல்ல முடிவை கூறுங்கள் என அவரது ரசிகர்கள் ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டிவருகின்றனர். சரி, இது ஒரு புறம் இருக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த சூழலில் கமல் ஹாசன் மாநிலம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட பிரத்யேக வாகனம் ஒன்றும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் துவங்கியது. தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் கட்சியின் நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக இன்னும் இரு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முதல் அமர்வை கட்சி பொதுச்செயலாளர் தொகுத்து வழங்கினார். துணைத் தலைவர் வரவேற்புரை வாசிக்க கட்சி தேர்தலை அணுக வேண்டிய வழிமுறைகள் கூட்டத்தில் பேசப்பட்டன. மேலும், மாநில செயலாளர்கள் பேசின.ர் முடிவில் தலைவர் கமல்ஹாசன் பேசினார். சார் பணிகளுக்கான பொறுப்பு முருகானந்தத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் கூட்டணி என்பது என் வேலை, வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும். நம் கூட்டணி மக்களுடன் என்று குறிப்பிட்டார் என இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Justice Center ,assembly elections , People's Justice Center is in alliance with the people in the 2021 assembly elections ... !! Everyone must work for success; Kamalhasan Instruction
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...