×

சத்தியமங்கலம் அருகே 2 கன்றுகளை ஈன்ற பசுமாடு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் 3 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு சினை பசு மாடு நேற்று 2 கன்றுகளை ஈன்றது. இதைக் கண்ட விவசாயி ராஜேந்திரன் ஆச்சரியமடைந்தார். பசு மாடு ஈன்ற இரண்டு ஆண் கன்றுக்குட்டிகள் சிறிது நேரத்திலேயே பசுவின் மடியில் இருந்து முட்டி முட்டி பால் குடித்ததோடு துள்ளிக் குதித்து விளையாடின. இரண்டு பசுக் கன்றுகளை ஈன்ற தாய் பசுவை அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

Tags : Satyamangalam , Cow
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு