சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஏர் கலப்பை பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார் என்று கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறி ஏர் கலப்பை பேரணி நடக்கிறது. மேலும் ராகுல் காந்தி பங்கேற்கும் விவசாயிகள் பேரணி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.