×

கொரோனா தாண்டவத்தில் இருந்து மீளும் இந்தியாவில்... புதிய பாதிப்பும் உயிரிழப்பும் குறைந்தது... குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.22 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 82 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 45,230 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82,29,313 ஆக உயர்ந்தது.
* புதிதாக 496 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,22,607.ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 53,285 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 75,44,798 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,61,908 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 91.68% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.49% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 6.83% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 8,55,800 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 11,07,43,103 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags : India ,corona crossing ,survivors , Corona, India, vulnerability, loss of life, recovery, number
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...