கொச்சி: கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் தமிழகத்தில் பல கோடி முதலீடு செய்துள்ளது அம்பலமாகி உள்ளது. நாகர்கோவிலில் காற்றாலை நிறுவனத்தில் பினாமி பெயரில் தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய சிவசங்கரின் ஆடிட்டர் வேணுகோபாலிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் காற்றாலை நிறுவியது ஜெர்மனி நிறுவனம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.