×

தமிழகத்தில் தேசிய கட்சிகள் வேரூன்றவில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

கோவில்பட்டி: தமிழகத்தில் தேசிய கட்சிகள் வேரூன்றவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.  கோவில்பட்டியில், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எம்ஜிஆருக்கு பின்னர் பல திரைப்பட நடிகர்கள் சிவாஜி முதல் கமல்ஹாசன் வரை கட்சி ஆரம்பித்திருந்தாலும் இதுவரை நீடித்து இருக்கும் கட்சிகளாக அதிமுக, திமுகதான் உள்ளது. மற்ற கட்சிகளைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தமிழகத்தில் தேசிய கட்சிகள் வேரூன்றவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆயுட்கால முதல்வர்களாக இருந்தனர்.

அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் எத்தனை கட்சிகள் வந்தாலும், எத்தனை போட்டிகள் வந்தாலும் தமிழகத்தில் வெற்றி பெறப்போவது அதிமுக தான். மதுரையில் வர உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாகக்குழு உறுப்பினராக மருத்துவர் சண்முகம் சுப்பையாவை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர் மீதான புகாரில் உண்மை இருந்தால் நியமனத்தை மறுபரிசீலனை செய்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : parties ,Kadampur Raju ,Tamil Nadu , National parties are not rooted in Tamil Nadu: Interview with Minister Kadampur Raju
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...