டெல்லி: பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு எனது தோழி என்ற திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியது. ரயிலில் செல்லும் பெண் பயணிகளுக்கு புறப்படும் ரயில் நிலையத்தில் இருந்து சென்றடையும் இடம் வரை பாதுகாப்பு வழங்கப்படும். தென் கிழக்கு ரயில்வேயில் தொடங்கப்பட்ட திட்டம் பெண்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பயணத்தின் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் 182 என்ற எண்ணில் பெண்கள் புகார் அளிக்கலாம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.