சென்னை: 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் கொள்கை முடிவின் அடிப்படையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவை நனவாக்கியது முதல்வர் தலைமையிலான அரசு. ஆளுநர் ஒப்புதல் அளித்ததன் மூலம் கொண்ட கொள்கையில் நிலையாக இருந்து மாணவ சமுதாயத்தின் சேவைகளை முழுமையாக அரசு நிறைவேற்றும் எனவும் கூறியுள்ளார்.