சென்னை : முத்துராம லிங்க தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி, கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
குற்றப்பரம்பரை என்று
குறிவைக்கப்பட்ட கூட்டத்தைக்
கொற்றப்பரம்பரை என்று
முற்றும் விடுதலை பெற்றுத்தந்த
வெற்றித் தலைவர் தேவர் திருமகனார்.
அவர் பிறந்த மண்ணைக்
கசிந்த கண்ணோடும்
கனத்த நெஞ்சோடும்
கைகூப்பித் தொழுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.