×

புதிதாக 2,652 பேருக்கு கொரோனா

சென்னை: சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 75,224 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 2,652 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 4,087 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது வரை 6 லட்சத்து 79 ஆயிரத்து 387 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 24 ஆயிரத்து 886 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதைச் சேர்த்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 11,053 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,newcomers , Corona for 2,652 newcomers
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...