சென்னை: அரியர் தேர்வு வழக்கில் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை குறிப்பிட்டு பதில்மனு தாக்கல் செய்யாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இறுதி பருவத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும் போது அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.