சென்னை: சேலம் அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில் இருந்து 37 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 37 பேர் மீது தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வீரபாண்டி ஆறுமுகம், முருகேசன் ஆகியோர் இறந்த நிலையில் 35 பேர் விடுவிக்கப்ட்டுள்ளனர்.