நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பதை தடை செய்ய கோரி மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம் உள்ளிட்ட 15 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.