திருப்போரூர்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்போரூர் வட்ட செயலாளர் அருள்ராணி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பாரதிஅண்ணா, மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் வெள்ளிக்கண்ணன், வட்ட துணை தலைவர் லிங்கன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து ஊராட்சிமாற்றுத் திறனாளிகளுக்கு நீலநிற பணி அட்டை வழங்க வேண்டும். முழு கூலித்தொகையுடன் கட்டாயமாக 100 நாள் வேலை வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, கோரிக்கை மனுவை, ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவனிடம் வழங்கினர். முடிவில், வட்ட பொருளாளர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.