சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்ணை துன்புறுத்திய புகாரில் வழக்கு பதியப்பட்டவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம் என்று ரவிக்குமார் எம்.பி. கூறியுள்ளார். மேலும் பெண்மையை இழிவுபடுத்தியதற்கு கொடுக்கப்படும் பரிசா? இதுதான் மனுசாஸ்திர வலி ஆட்சியா? என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.