×

தமிழகத்தில் புதிதாக 2,522 பேருக்கு கொரோனா

சென்னை:  தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று 70,687 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 2,522 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 235 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 1,518 பேர் ஆண்கள். 1,004 பேர் பெண்கள். தற்போது 4 லட்சத்து 31 ஆயிரத்து 112  ஆண்கள், 2 லட்சத்து 83 ஆயிரத்து 901 பேர் பெண்கள், 32 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  4,029 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 6 லட்சத்து 75 ஆயிரத்து 518 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

27 ஆயிரத்து 273 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 11 பேர், அரசு மருத்துவமனையில் 16 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 27 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இணை நோய்களுடன் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 10,983 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,Tamil Nadu , Corona for 2,522 new people in Tamil Nadu
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...