×

கம்பெனி ஊழியர் பலி

ஆவடி: சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பவுல் சண்முகராஜ்(40). தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று முன்தினம் மாலை தனது தோழி ரீனாவுடன் பைக்கில் ஆவடி சென்று பின்னர் மீண்டும் அங்கிருந்து பைக்கில் நள்ளிரவு வியாசர்பாடிக்கு திரும்பி கொண்டிருந்தனர். திருமுல்லைவாயல் சி.டி.எச் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், பைக்கில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பவுல் சண்முகராஜ் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரீனா காயத்துடன் உயிர் தப்பினார். தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய குன்றத்தூர் நந்தம்பாக்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஐயப்பன்(37) என்பவரை கைது செய்தனர்.

Tags : Company employee , Company employee killed
× RELATED போலீசாரின் தடையை மீறி பறக்கவிடப்பட்ட...