டெல்லி: ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டின் விழிப்பான இந்தியா - வளமான இந்தியா காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். நமது நிர்வாக நடைமுறை வெளிப்படையாகவும் மக்களுக்குப் பதிலளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஊழல் என்பது வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மட்டுமின்றி சமூக சமநிலையையும் வெகுவாக பாதிக்கிறது. மேலும், ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இன்றி இந்த அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அவர் உரையாற்றி உள்ளார்.