×

தந்தை பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டிருப்பது கோழைத்தனமான செயல் : ராமதாஸ் ட்விட்டரில் பதிவு!!

சென்னை : திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பங்காருபுரத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் வளாகத்தில் தந்தை பெரியார் சிலை உள்ளது. நேற்றிரவு 8 மணியளவில் இந்த சிலை மீது, சமூக விரோதிகள் சிலர் காவி சாயத்தை ஊற்றி விட்டு சென்று விட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், சிலை மீது பூசப்பட்டிருந்த, காவி சாயத்தை அகற்றி சுத்தம் செய்தனர். பின்னர் சிலைக்கு கருப்பு பெயின்ட் அடிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டிருப்பது கோழைத்தனமான செயலாகும். இச்செயலை செய்தவர்கள் தாங்கள் கோழைகள் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்!  

தந்தை பெரியாரின் கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்ள துணிச்சல் இல்லாதவர்கள் தான் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் பின்னணியில் உள்ள நச்சுக்கிருமிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்!திருச்சி இனாம்புலியூரில் கடந்த மாதம் இதே நாளில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கும், இன்றைய நிகழ்வுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும். இரு குற்றங்களிலும் சம்பந்தப்பட்டவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்! எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Periyar ,Ramadas , Father Periyar idol, saffron, cowardice, action, Ramadas, record
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...