×

சிபிஐ விசாரணை பொருத்தமானது: ஹத்ராஸ் வழக்கு விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றமே கண்காணிக்கும் ...உச்சநீதிமன்றம் அறிவிப்பு.!!!

டெல்லி: ஹத்ராஸ் பெண் பலாத்கார வழக்கு கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது உத்தரப்பிரதேச காவல்துறையினர் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி உள்ளதாக பல்வேறு தரப்பில் குற்றசாட்டு எழுந்துள்ளது. இதில் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ஹத்ராஸ் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் இதில் நடந்த உன்மை என்னெவென்று வெளிப்படையாக தெரியவரும்.மேலும் சிபிஐ விசாரணையாகவே இருந்தாலும் கூட ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் தான் அது நடைபெற வேண்டும். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றால் அது நிச்சயம் நியாயமானதாக இருக்காது என்பதால் வழக்கை டெல்லிக்கு மாற்றி, அதனை நடத்தி முடிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணை வந்தபோது, ஹத்ராஸ் பெண் பலாத்கார வழக்கு கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமே ஹத்ராஸ் வழக்கு விசாரணையை கண்காணிக்கும். வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்றுவது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு எதுவும் எடுக்கவில்லை. சிபிஐ தனது நிலை அறிக்கைகளை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். சிபிஐ விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவது பொருத்தமானது. சிபிஐ விசாரணையை முடித்த பிறகு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது பற்றி பரிசீலிக்கலாம். என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : CBI ,Allahabad High Court ,Supreme Court , CBI probe relevant: Allahabad High Court to oversee Hadras case ... Supreme Court announcement. !!!
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...