திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பேகம்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். காமராஜர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மறியலில் ஈடுப்பட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி, சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.