ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கள்ளிப்பாளையத்தில் 16 வயது சிறுவன் அருண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான நிலையில் கேமுக்கு தடை விதிக்கப்பட்டதால் மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் பப்ஜி கேமுக்கு அடிமையான மாணவன் அருண் மனநல சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் பெற்றோர் தகவல் தெரிவித்துள்ளனர்.