சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் நலவாரிய உறுப்பினருமான ரெ.தங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அவரது உறவினர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் உடல் நலம் விசாரித்தனர்.