×

நெல்லையில் குளத்தில் கிடந்த வெளிநாட்டு துப்பாக்கி: போலீசார் பறிமுதல்

நெல்லை: நெல்லை டவுனை அடுத்துள்ள கண்டியப்பேரி குளத்தின் கரையோரம் மர்ம பார்சல் கிடப்பதாக தச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. போலீசார் சென்று பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கிடந்த அந்த பார்சலை கைப்பற்றினர். அதில் பிஸ்டல் (கைத் துப்பாக்கி) மற்றும் இரண்டு தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது. 7 எம்எம் ரகத்தை சேர்ந்த இந்த நவீன ரக துப்பாக்கி, ஜப்பானில் கடந்த 2018ல் தயாரிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம். அந்த பிஸ்டலை இன்று ஆயுதப்படை நிபுணர்கள் ஆய்வு செய்தபின் தாசில்தாரிடம் ஒப்படைத்து, கருவூலத்தில் வைக்கப்பட உள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், கூலிப்படையினர் பாதுகாப்பிற்காக வைத்திருந்து, வெளியே தெரிந்ததால், குளக்கரையில் புதைத்து இருக்கலாம், அதை நாய் தோண்டி வெளியே போட்டதால் தெரிய வந்துள்ளது என்றனர். குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட 7 எம்எம் போன்ற பிஸ்டல் ரகங்கள் ஜெர்மன், தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா மற்றும் ரஷ்யாவில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இந்த பிஸ்டல் ரகங்களை கடந்த சில ஆண்டுகளாக நக்சல்கள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து அதிக விலை கொடுத்து தென்மாநில பகுதியை சேர்ந்தவர்கள் ரகசியமாக வாங்கி வருவதாக உளவுத்துறை போலீசார் தெரிவித்தனர். 


Tags : pond ,Nellai , Foreign gun found in Nellai pond: Police seize it
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...