×

ரஜினியுடன் ஏ.சி.சண்முகம் திடீர் சந்திப்பு

ரஜினிகாந்தை, புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் நேற்று சந்தித்து பேசினார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. சுமார் ஒரு மணி நேரம் இருவரும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி தொடங்குவேன் என்று ரஜினி அறிவித்திருந்தார். கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டாலும் நான் முதல்வராக மாட்டேன். படித்த, அனுபவமுள்ள, நிர்வாகத்திறமை மிக்க ஒருவரை முதல்வராக்குவேன். என்றும் அறிவித்திருந்தார். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் கட்சிகள் முதல்வர் வேட்டாளரை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் ரஜினி, ஏ.சி.சண்முகம் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஜயதசமி நாளில் ரஜினி புதிய திட்டம் ஒன்றை அறிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : A.C. Shanmugam ,Rajini , A.C. Shanmugam meets Rajini suddenly
× RELATED பாஜக கூட்டணியில் தொகுதிகள் இறுதி...