×

தமிழகத்தில் மேலும் 2,708 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,11,713 ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 2,708 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,11,713 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 32 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 10,956 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 4,014 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,71,489-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Corona ,victims ,Tamil Nadu , Corona for 2,708 more in Tamil Nadu; Number of victims rises to 7,11,713: Health Department
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...