டெல்லி: இந்தியா - அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அமைச்சர்கள் டெல்லி வந்தனர். இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு துறை மார்க் எஸ்பெர் ஆகியோர் விமானம் மூலம் டெல்லி வந்தனர். முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட முப்படை தளபதிகளும் பங்கேற்றுள்ளனர்.