டெல்லி: பிரதமர் மோடி மீது பஞ்சாப் மக்கள் கடும் கோபத்தில் உள்ளது துரதிருஷ்டவசமானது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து பஞ்சாப் மக்கள் நவராத்திரி கொண்டாடியது குறித்து ராகுல் காந்தி கருத்து கூறியுள்ளார். பிரதமர் மீதான கோபம் ஆபத்தான முன்னுதாரணம்; இது நாட்டுக்கு நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார். விவசாயிகளை அணுகி பிரதமர் மோடி தீர்வுகாண ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.