×

கடந்த 24 மணி நேரத்தில் 480 பேர் உயிரிழப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 79.09 லட்சமாக உயர்வு; மீண்டோர் விகிதம் 90.00% ஆக அதிகரிப்பு.!!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.19 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 79.09 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 45,148 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 79,09,959 ஆக உயர்ந்தது.
* புதிதாக 480 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,19,014 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 59,105 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 71,37,229 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,53,717 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 90.00% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.51% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 8.50% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 9,39,309 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 10,34,62,778 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags : deaths ,India ,Corona ,Mindor , 480 deaths in last 24 hours: Corona impact in India rises to 79.09 lakh; Mindor rate increases to 90.00% !!!
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!