×

புதிதாக 6 பேருக்கு தொற்று தாராவியில் கொரோனா பாதிப்பு 3,489 ஆக உயர்வு

மும்பை: தாராவியில் 6 பேருக்கு புதிதாக நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் மொத்த பாதிப்பு 3,489 ஆக உயர்ந்துள்ளது. மும்பை மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை: தாராவியில் நேற்று 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 3489 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,030 ஆக உயர்ந்துள்ளது தற்போது 151 பேர் மட்டும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் மாகிமில் 21 பேர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கு மொத்த பாதிப்பு 3,968 ஆக அதிகரித்துள்ளது.

 தற்போது 392 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாதரில் புதிதாக 13 பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இங்கு பாதிப்பு 4,268 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 268 பேர் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3,840 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்த ஜி வடக்கு வார்டில் இதுவரை 11 ஆயிரத்து 725 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 811 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். 10,311 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Coronavirus infection in 6 new cases increases to 3,489
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...