மதுரை: திருமங்கலம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓய்வுபெற்ற ராணுவ வீரர் முருகவேல் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி செல்வம்(ஓய்வு) உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த கார் ஓட்டுநர் சங்கையா(50) திருமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்காசியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் சுருளிப்பட்டியில் நிலை தடுமாறி மரத்தில் மோதியது.